கடந்த டிசம்பர் 28ம் தேதி வரை நாடு முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாஸ்டேகுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 26ம் தேதி 1,35,583 ஃபாஸ்டேகுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒரேநாளில், இவ்வளவு அதிகமான ஃபாஸ்டேகுகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக வாகன ஓட்டிகளுக்கு ஜூலை மாதத்தில், சராசரியாக ஒவ்வொரு நாளும் அதிகப்பட்சமாக 8000 ஃபாஸ்டேகுகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் கடந்த 27ம் தேதியில் இருந்து 28ம் தேதிக்குள் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாஸ்டேகுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருபொருள் இவ்வளவு எண்ணிக்கையில், ஒருநாளுக்குள் விநியோகிக்கப்பட்டது இதுவே முதல்முறை என நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 21ம் தேதி முதல் நாட்டிலுள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஃபாஸ்டேகுகளை இலவசமாக வழங்கி வருகிறது . மத்திய அரசைத் தவிர, குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களிடம் ஃபாஸ்டேகுகளை வாகன ஓட்டிகள் பணம் கொடுத்து வாங்கலாம்.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் குறிப்பிட்ட வாகனச்சாவடிகளில்