ஃபாஸ்டேக் முறைக்கான அவகாசம் நீட்டிப்பு

இதற்கிடையில் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறையை நடைமுறைப்படுத்த டிசம்பர் 15ம் தேதி வரை கால அவமாகசம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திருப்தி அடைந்துள்ளனர்.

இதுவரை ஃபாஸ்டேகுகளை வாங்காதாவர்கள், தங்களுடைய வாகனப் பதிவுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், அரசின் அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான சான்றிதழை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

அதை தொடர்ந்து அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு FASTag என்கிற ஸ்டிக்கரை வழங்குவார்கள். அதை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். பிறகு கூகுள் பிளே ஸ்டோர் மூலம் FASTag என்கிற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அடிக்கடி சுங்கச்சாவடிகளை கடப்பவராக நீங்கள் இருந்தால், அதில் ரூ.1 முதல் ரூ. 1 லட்சம் வரை ரீஜார்ஜ் செய்யலாம். எப்போதெல்லாம் உங்களுடைய வாகனம் சுங்கச்சாவடிகளை கடக்கிறதோ, அப்போது ஃபாஸ்டேக்கை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தலாம்.