மீள முடியாத ஆபத்து காத்திருக்கிறது: பருவநிலை மாநாட்டில் ஐ.நா. தலைவர் எச்சரிக்கை

பருவநிலை மாநாட்டு டிசம்பர் 2 முதல் 13 வரை நடைபெறுகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.


ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இரண்டு வாரங்கள் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் திங்கட்கிழமை ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரஸ் உரையாற்றினார்.


அப்போது, புவி வெப்பநிலை சரிசெய்ய முடியாத அளவுக்கு அதிகமாகிவிடும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

அதீதமான வானிலை மாற்றங்கள் ஏற்கெனவே உலகம் முழுவதும் கண்கூடாகத் தெரிகின்றன என்றும் மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிர்களையும் பாதிக்கும் நம்பமுடியாத அளவுக்கு பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவியல் அறிவும் தொழில்நுட்ப வசதிகளும் உலகில் இருக்கவே செய்கின்றன.


இல்லாதது அரசியல் ரீதியான விருப்பம்தான். திரும்பிவர முடியாத மோசமான நிலையை எட்டுவது வெகு தொலைவில் இல்லை" என்றும் குட்டெரஸ் கூறினார்.